Showing posts with label திருப்பதிகம். Show all posts
Showing posts with label திருப்பதிகம். Show all posts

Friday, February 26, 2016

சொற்றுணை வேதியன்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

(திருநாவுக்கரசரின் நமச்சிவாய திருப்பதிகம்)


சொல்லுக்கு துணையானவன், சோதி வடிவானவன், பொன்போன்ற திருவடிகளை உடையவன், இவனைக் கைதொழுவதால், கல்லைத் துணை கொண்டு நம்மைக் கட்டி, கடலில் தூக்கி போட்டு பாய்ச்சி விட்டாலும், எம்பெருமானின் “நமசிவாய” எனும் நாமமே நல்ல துணையாகும்.