Showing posts with label தூமணி மாடத்து. Show all posts
Showing posts with label தூமணி மாடத்து. Show all posts

Wednesday, December 24, 2014

தூமணி மாடத்து...

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்! 
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் 
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ 
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ 
மாமாயன் மாதவன்  வைகுந்தன் என்றென்று 
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.