Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-67

(சர்வ சிரூஷ்டி)

வாரணி கொங்கை மனோன்மணி மங்கிலி
காரண காரியமாகக் கலந்தவள்
வாரணியார் அணி ஆணவம் மோகினி
பூரணி போதாது அதி போதமுமாமே!

வாரணி கொங்கை மனோன்மணி மங்கிலி
காரண காரிய மாகக் கலந்தவள்
வாரணி யாரணி யானவம் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-67)

அகத்திய மூலம் திருமந்திரம்-66

(சர்வ சிரூஷ்டி)

அளியார் முக்கோணம் அயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரையாம் அவன் தானே
அளியார் சதாசிவமாகிய மைவான்
அளியார் கருமம் களைந்து செய்வானே!

அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னி
லளியார் திரிபுரை யாமவ டானே
யளியார் சதாசிவ மாகிய மைவா
னளியார் கருமங்க ளைந்துசெய் வானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-66)

அகத்திய மூலம் திருமந்திரம்-65

(சர்வ சிரூஷ்டி)

ஆகாய ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்துடன் போந்தனர்
ஆகாய ஈசன் அரன் மால் பிரமனாம்
ஆகாயம் பூமியும் கான அளித்தலே!

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய வீச னரன்மால் பிரமனா
மாகாயம் பூமியுங் கான வளித்தலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-65)

அகத்திய மூலம் திருமந்திரம்-64

(சர்வ சிரூஷ்டி)

உற்ற முப்பால் ஒன்று உமையாள் உதயமா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவர் நாதம் பரையில் பிறத்தலால்
உள்ள பரசிவன் சொல் விளையாட்டிதே!

உற்றமுப் பாலொன் றுமையா ளுதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவ ணாதம் பரையிற் பிறத்தலாற்
றுற்ற பரசிவன் றொல்விளை யாட்டிதே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-64)

அகத்திய மூலம் திருமந்திரம்-63

(சர்வ சிரூஷ்டி)

ஆணவச் சத்தியுமாம் அதிலை வரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந்தொழிலால் விந்துவில் பிறந்த
ஆணவ நீங்காதவர் எனலாகுமே!

ஆணவச் சத்தியு மாமதி லைவருங்
காரிய காரண வீசர் கடைமுறை
பேணிய வைந் தொழி லால்விந்து விற்பிறந்
தாணவ நீங்கா தவரென லாகுமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-63)

அகத்திய மூலம் திருமந்திரம்-62

(சர்வ சிரூஷ்டி)

புகுந்து அறிவான் புவனாபதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முழக்காகி நின்றாரே!

புகுந்தறி வான்புவ னாபதி யண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முழுக் காகிநின் றாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-62)

அகத்திய மூலம் திருமந்திரம்-61

(சர்வ சிரூஷ்டி)

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றுமாமே!

ஒருவ னொருத்தி விளையாட லுற்றா
ரிருவர் விளையாட்டு மெல்லாம் விளைக்கும்
பருவங்க டோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-61)

அகத்திய மூலம் திருமந்திரம்-60

(சர்வ சிரூஷ்டி)

ஆடுகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற சொம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண்டகையானே!

ஆடுகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்
வேகின்ற சொம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாயுள
னாகின்ற தன்மைசெய் யாண்டகை யானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-60)

அகத்திய மூலம் திருமந்திரம்-59

(சர்வ சிருஷ்டி)

நின்று உயிராக்கு நீமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன் உயிர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே!

நின்றுயி ராக்குநீ மலனென் னாருயி
ரொன்றுயி ராக்கு மளவை யுடலுற
முன்னுயி ராக்கு முடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-59).

அகத்திய மூலம் திருமந்திரம்-58

(சர்வ சிருஷ்டி)

போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற வெட்டுத் திசையொடுந்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே!

போக்கும் வரவும் புனித னருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற வெட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-58)

அகத்திய மூலம் திருமந்திரம்-57

(சர்வ சிருஷ்டி)

பயன் எளிதாம் பரு மாமணி செய்ய
நயன் எளிதாகிய நம்பன் என்று உண்டு
வயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே!

பயனெளி தாம்பரு மாமணி செய்ய
நயனெளி தாகிய நம்பனென் றுண்டு
வயனொளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-57)

அகத்திய மூலம் திருமந்திரம்-56

(சர்வ சிருஷ்டி)

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
நாரணமாய் உலகாய் அமர்ந்தானே!

காரண னன்பிற் கலந்தெங்கு நின்றவன்
நாரண னின்ற நடுவுட வாய்நிற்கும்
பாரண னன்பிற் பதஞ்செய்யு நான்முக
னாரண மாயுல காயமர்ந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-56).

அகத்திய மூலம் திருமந்திரம்-55

(சர்வ சிருஷ்டி)

ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே!

ஓங்கு பெருங்கட லுள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் றானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலய
னாங்குயிர் வைக்கு மதுவுணர்ந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-55)

அகத்திய மூலம் திருமந்திரம்-54

(சர்வ சிருஷ்டி)

உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே!

உண்டுல கேழு முமிழ்ந்தா னுடனாகி
யண்டத் தமரர் தலைவனு மாதியுங்
கண்டச்  சதுமுகக் காரணன் றன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-54)

அகத்திய மூலம் திருமந்திரம்-53

(சர்வ சிருஷ்டி)

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்றிடை
ஒர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பாமே!

நீரகத் தின்பம் பிறக்கு நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்குமக் காற்றிடை
யோர்வுடை நல்லுயிர்ப் பாத மொலிசத்தி
நீரிடை மணிண னிலைபிறப் பாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-53)

அகத்திய மூலம் திருமந்திரம்-52

(சர்வ சிருஷ்டி)

புண்ணியன் அந்தி பொருந்தும் உலகு எங்கும்
மண் இயல்பாகி வளர்ந்திடும் சத்தியும்
தண் இயல்பாகித் தரணி முழுவதுமாய்
கண் இயல்பாகிக் கலந்து எழும் பூவிலே!

புண்ணிய னந்தி பொருந்து முலகெங்கு
மண்ணியல் பாகி வளர்ந்திடுஞ் சத்தியுந்
தண்ணியல் பாகித் தரணி முழுவதுமாய்
கண்ணியல் பாகிக் கலந்தெழும் பூவிலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-52)