கந்தரனுபூதி-11
கூகா என என் கிளை
கூடி அழப்
போகா வகை
மெய்ப்பொருள் பேசியவா
நாகாசலவேலவ நாலு
கவித்
த்யாகா சுர லோக
சிகாமணியே.
(கூ கூ என என்
சொந்தங்கள் கூடி அழுது புலம்ப, என் உயிர் போய் விடாதபடி
எனக்கு மெய்பொருளை பேசி உபதேசித்தவனே! நாகாசலம் என்னும் செங்கோட்டு மலையில் வாழும்
வேலவனே! கவி புனைய தேவைப்படும் நான்கு வகை கவிகள்* மூலமும் உன்னை பாடப்படும் தியாக
சுர லோகம் என்னும் விண்ணுலக சிகாமணியே!)
(*நான்கு வகை கவிகள்:
ஆசு கவி, மதுர கவி, சித்திரக்
கவி, வித்தாரக் கவி).
கூகா வெனவென் கிளைகூ
டியழப்
போகா வகைமெய்ப்
பொருள்பே சியவா
நாகா சலவே லவநா
லுகவித்
த்யாகா சுரலோ கசிகா
மணியே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-11)
**
No comments:
Post a Comment