Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-34


கந்தரனுபூதி-34

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரந் தருவாய்
சங்க்ராம சிகாவல சண் முகனே
கங்கா நதி பால கிர்பாகரனே.

(சிங்காரமான மடந்தையர் என்னும் அழகு பெண்களின் மீது ஆசை கொண்டு தீய வழியில் சென்று, நான் மங்கிப் போகாமல் எனக்கு வரம் தருவாய்! சங்ப்ராம சண்முகனே! கங்கை நதியின் பாலகனே! கிருபாகரனே!)

சிங்கா ரமடந் தையர்தீ நெறிபோய்
மங்கா மலெனக் குவரந் தருவாய்
சங்க்ரா மசிகா வலசண் முகனே
கங்கா நதிபா லகிர்பா கரனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-34)

**

No comments:

Post a Comment