கந்தரனுபூதி-33
சிந்தாகுலம் இல்லொடு
செல்வம் எனும்
விந்தாடவி என்று
விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த
வரோதயனே
கந்தா முருகா
கருணாகரனே.
(மனச் சஞ்சலத்துடனான
இல்லற வாழ்க்கையில், செல்வத்துடன், மலைபோன்ற சிக்கலையும் கொடுத்து விட்டாயே! இதிலிருந்து எப்போது நான் விலகி
விடைபெறுவேன்! மந்தாகினி பெற்ற வரோதயனே! கந்தா! முருகா! கருணாகரனே!)
சிந்தா குலவில்
லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்
றுவிடப் பெறுவேன்
மந்தா கினிதந் தவரோ
தயனே
கந்தா முருகா கருணா
கரனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-33)
**
No comments:
Post a Comment