Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-32


கந்தரனுபூதி-32

கலையே பதறிக் கதறித் தலையூடு
உடலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே.

(கலை எனும் இந்த மாயை சார்ந்த உலகத்தின் கலையை பதறிக் கதறித் தலைக்குள் ஊடுறுவி தெரிந்து கற்றுக் கொண்டு, உடலையே அதுவாய் மாற்றி விடும்படி ஆகிவிடுகிறதே! கொலைத் தொழிலைச் செய்யும் குலமான வேடர் குலத்தில் பிறந்தவளை கைப் பிடத்தவனே! மலையையே கூறிட்டு (உன் வாளால் கூறாகப் பிளந்த) வாகையனே!)

கலையே பதறிக் கதறித் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரிவே டர்குலப் பிடிதோய்
மலையே மலைகூ றிடுவா கையனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-32)

**

No comments:

Post a Comment