கந்தரனுபூதி-31
பாழ்வாழ்வு எனும் இப்
படு மாயையிலே
வீழ்வாய் என என்னை
விதித்தனையே
தாழ்வானவை செய்தன
தாமுளவோ
வாழ்வாய் இனி நீ
மயில் வாகனனே.
(பாழும் இந்த வாழ்வு
என்னும் மாயப் படுகுழியில் வீழ்வாய் என்று என்னை விதித்து அனுப்பி விட்டீரே!
தாழ்வான (இழிவான) காரியங்களை நான் செய்துதான் இதற்கு காரணமா இருக்குமோ! இனி என்னை
நீ வாழவைப்பாய் மயில் வாகனனே!)
பாழ்வாழ் வெனுமிப்
படுமா யையிலே
வீழ்வா யெனவென்
னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதா
முளவோ
வாழ்வா யினிநீ
மயில்வா கனனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-31)
**
No comments:
Post a Comment