கந்தரனுபூதி-30
செவ்வான் உருவில்
திகழ் வேலவன் அன்று
ஒவ்வாது என
உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார்
அறிகின்றதலால்
எவ்வாறு
ஒருவர்க்கு இசை விப்பதுவே.
(செவ்வான் என்னும்
சிவந்த வானத்தின் உருவில் திகழும் வேலவன், எனக்கு
"ஒப்பற்றது" என அதை
உணர்வித்தான்! அதை அவ்வாறு அறிந்து கொள்ள முடியுமே தவிர (தானே அனுபவிக்க
முடியுமே தவிர), அதை அவ்வாறு ஒருவருக்கு சொல்லி விளங்க வைக்க
முடியாதே!)
செவ்வா னுருவிற்
றிகழ்வே லவனன்
றொவ்வா ததென
வுணர்வித் ததுதா
னவ்வா றறிவா ரறிகின்
றதலா
லெவ்வா றொருவர்க்
கிசைவிப் பதுவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-30).
**
No comments:
Post a Comment