கந்தரனுபூதி-29
இல்லே எனும் மாயையில்
இட்டு என்னை நீ
பொல்லேன் அறியாமை
பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு
வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.
(இல் என்னும்
இல்வாழ்வான மாயையில் என்னை இட்டு சிக்க வைத்திருக்கிறீர்! இந்த பொல்லாதவன்
அறியாமையை பொறுத்து அருள மாட்டீரா! மல் என்னும் மற்போர் புரியும் உன் பன்னிரண்டு
தோள்களிலும், என் சொல்லைக் கொண்டு உனக்கு
பாடல் புனைந்து அணிவேன், சுடர் வேலவனே!)
இல்லே யெனுமா
யையிலிட் டனைநீ
பொல்லே ன்றியா
மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா
குவிலென்
சொல்லே புனையுஞ்
சுடர்வே லவனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-29)
**
No comments:
Post a Comment