Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-28


கந்தரனுபூதி-28

ஆனா அமுதே அயில் வேல் அரசே
ஞானாகரனே  நவிலத் தகுமே
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே.

(ஆனா அமுதே! கூர் வேல் அரசே! ஞானாகரனே! சொல்லக் கூடுமோ! "நான்"  ஆகிய "என்னை" விழுங்கி, (நான் என்னும் எனது ஆணவத்தை நீக்கி), வெறும் "தானாய்" (மேலான நிலையில்) நிலைத்து நின்றது தற்பரம் என்னும் எல்லாம் வல்ல இறைவனான நீயே!)

ஆனா வமுதே யயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமே
யானா கியவென் னைவிழுங் கிவெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரமே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-28)

**

No comments:

Post a Comment