Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-27


கந்தரனுபூதி-27

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே வினையின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.

(மின்னலைப் போன்று (தோன்றியவுடன்  மறையும்) வாழ்வை நான் விரும்பி, இந்த வாழ்வில் நான் இருப்பதற்கு காரணம் என் வினைப் பயன் தானோ! பொன்னே! மணியே! பொருளே! அருளே! மன்னே! (மன்னவனே!), மயில் மீது ஏறிய வானவர்களின் தலைவனே!)

மின்னே நிகர்வாழ் வைவிரும் பியயா
னென்னே வினையின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலே றியவா னவனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-27)

**

No comments:

Post a Comment