Saturday, March 12, 2016

கந்தரனுபூதி-26


கந்தரனுபூதி-26

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனோ
தீதா சுர லோக சிகாமணியே.

(ஆதாரமே இல்லாமல் இருக்கிறேன்! உன் அருளைப் பெற, நீ தான் ஒரு சிறிதளவேனும் நினைக்க மாட்டேன் என்கிறாயே! வேதமாக இருப்பவனே! ஞானமாக இருப்பவனே! வினோத மனோதீதமாக இருப்பவனே! சுர லோக சிகாமணியே!)

ஆதா ரமிலே னருளைப் பெறவே
நீதா னொருசற் றுநினைந் திலையே
வேதா கமஞா னவினோ தமனா
தீதா சுரலோ கசிகா மணியே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-26)
**



No comments:

Post a Comment