Friday, March 11, 2016

கந்தரனுபூதி-25


கந்தரனுபூதி-25

மெய்யே என வெவ் வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே.

(இதுதான் மெய் (உண்மை) என்று இந்த கொடும் வினையான வாழ்வை மகிழ்ந்து வாழ்கிறேன்! ஐயோ! அடியேன் இப்படி அலைந்து திரிதல் தகுமா! உன் கையில் இருக்கும் வேலோ, உன் கழலோ, முழுதும் செந்நிறமாகி, மயிலில் ஏறும் சேவகனே!)

மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுக
தையோ வடியே னலையத் தகுமோ
கையோ வயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-25)

**

No comments:

Post a Comment