கந்தரனுபூதி-24
கூர்வேல் விழி
மங்கையர் கொங்கையிலே
சேர் வேன் அருள்
சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று
துளைத்த நெடும்
போர் வேல் புரந்தர
பூபதியே.
(கூரான வேல் போன்ற
பெண்களின் கொங்கையிலே சேரும் ஆசையை உடைய என் மனமானது, உனது அருளைப் பெறவும், உன்னைச்
சேரவும் முடியுமா! சூரனை வேரோடும் குன்றோடும் அழித்த போர் வேலைக் கொண்ட இந்த
பிரபஞ்சத்தைக் காக்கும் பூபதியே!)
கூர்வேல் விழிமங்
கையர்கொங் கையிலே
சேர்வே னருள்சே
ரவுமெண் ணுமதோ
சூர்வே ரொடுகுன்
றுதுளைத் தநெடும்
போர்வே லபுரந் தரபூ
பதியே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-24)
**
No comments:
Post a Comment