கந்தரனுபூதி-23
அடியைக் குறியாது
அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ
முறையோ
வடிவிக்ரம வேல் மகிபா
குறமின்
கொடியைப் புணரும் குண
பூதரனே.
(உனது திருவடியை
நினைக்காது, என் அறியாமையினால் முடிவைத்
தேடும்படி விடுவது முறையாகுமோ, முறையாகுமோ! அழகு விக்ரம
வேலைக் கொண்டிருக்கும் முருகா! குறத்தி என்னும் கொடியைப் புணரும் குணம் கொண்ட
பூதரனே!)
அடியைக் குறியா தறியா
மையினான்
முடியக் கெடவோ முறையோ
முறையோ
வடிவிக் ரமவேன் மகிபா
குறமின்
கொடியைப் புணருங்
குணபூ தரனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-23)
**
No comments:
Post a Comment