Friday, March 11, 2016

கந்தரனுபூதி-22


கந்தரனுபூதி-22

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே.

(காளை என்னும் குமாரப் பருவத்து குமரேசன் என நான் கருதி, உன் பாதங்களை பணிந்து, தவத்தின் பேற்றை அடைந்தேன்! பாளைக் குழல் என்னும் நீண்ட கூந்தலைக் கொண்ட வள்ளியின் திருப்பாதங்களை பணிந்து, வேலையுடைய பூபதியே! மேரு மலைக்கு நிகரானவனே!)

காளைக் குமரே சனெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைக் குழல்வள் ளிபதம் பணியும்
வேளைச் சுரபூ பதிமே ருவையே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-22)
**


No comments:

Post a Comment