கந்தரனுபூதி-21
கருதா மறவா நெறி காண
எனக்கு
இருதாள் வனசம் தர
என்று இசைவாய்
வரதா முருகா மயில்
வாகனனே
விரதா சுர சூர
விபாடணனே.
(கருதவும் இல்லாத, மறக்கவும் இல்லாத (நினைவும் மறதியும் அற்ற) நெறியை
கைக்கொள்ள எனக்கு உனது இரு பாதங்களையும் அருள்வதற்கு ஒப்புக் கொள்வாயாக! வரதா
(வரம் தருபவனே), முருகா! மயிலை வாகனமாகக் கொண்டவனே! விரதா
சுரசூரபர்மனை துண்டாக்கியவனே!)
கருதா மறவா நெறிகா
ணவெனக்
கிருதாள் வனசந்
தரவென் றிசைவாய்
வரதா முருகா மயில்வா
கனனே
விரதா சுரசூ ரவிபா
டணனே.
(அருணகிரிநாதர் அருளிய
கந்தரனுபூதி பாடல்-21)
**
No comments:
Post a Comment