கந்தரனுபூதி-20
அரிதாகிய
மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம்
உணர்த்தியவா
விரி தாரண விக்ரம
வேள் இமையோர்
புரிதாரக நாக
புரந்தரனே.
(அரியதாகிய
(யாருக்கும் கிடைப்பதற்கு அரிதாகிய) மெய்ப்பொருளை, என்னைத்
தகுதியாக்கி, எனக்கு உபதேசம் செய்து உணர்த்தியவனே! விரிந்த,
உறுதியான, நிலையான, வலிமையான,
வெற்றியான, வேல் கொண்டவனே! இமையோர் என்னும்
கண் இமைக்காத வானவர்கள் தாரக மந்திரத்தை தியானிக்கும் நாக புரந்தரனே!)
அரிதா கியமெய்ப்
பொருளுக் கடியே
னுரிதா வுபதே
சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே
ளிமையோர்
புரிதா ரகநா கபுரந்
தரனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-20)
**
No comments:
Post a Comment