Thursday, March 10, 2016

கந்தரனுபூதி-19


கந்தரனுபூதி-19

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடி போகியாவா
அடி அந்தமிலா அயில் வேலரசே
மிடி என்றொரு பாவி வெளிப் படினே.

(அழகும், தனம் என்னும் செல்வமும், மனமும், குணமும், குடி என்னும் குடும்பப் பெருமையும், குலம் என்னும் குலப் பெருமையும், போய்விடுகிறதே! அடியும், நுனியும் இல்லாத இந்த பிரபஞ்சத்தை தாங்கும், வேலாயுதத்தை ஏந்திய அரசனே! மிடி என்று ஒரு பாவியான "வறுமைப்பிணி" வெளிப்பட்டு விட்டால், இத்தனை பெருமைகளும் போய் விடுகிறதே!)

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியாவா
வடியந் தமிலா வயில்வே லரசே
மிடியென் றொருபா விவெளிப் படினே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-19)

**

No comments:

Post a Comment