கந்தரனுபூதி-18
உதியா மரியா உணரா
மறவா
விதிமால் அறியா விமலன்
புதல்வா
அதிகா அனகா அபயா அமரா
பதிகா வல சூர பயங்
கரனே.
(உதித்தல், மரித்தல் என பிறப்பு இறப்பு அற்றவனே! உணர்வுக்கு
அப்பாற்பட்டவனே! நினைவைவிட்டு நீக்க முடியாதவனே!
விதிமால் என்னும் பிரம்மா, திருமால் இருவராலும் அறிய
முடியாதவனே! விமலன் புதல்வனே! அதிகா (முதல்வனே) அனகா (தெய்வீகனே), அபயா (அபயம் அளிப்பவனே), அமரா (விண்ணுலக பெருமானே),
பதிகா! சூரனுக்கு அச்சத்தை அளிப்பவனே!)
உதியா மரியா வுணரா
மறவா
விதிமா லறியா விமலன்
புதல்வா
வதிகா வனகா வபயா வமரா
வதிகா வலசூ ரபயங்
கரனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-18)
**
No comments:
Post a Comment