Thursday, March 10, 2016

கந்தரனுபூதி-17


கந்தரனுபூதி-17

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல் போல் அறம் மெய்ப்பு உணர்வீர்
நா மேல் நடவீர் நடவீர் இனியே.

(நான் கற்ற கல்வியும், எனது அறிவும் நானே அடையும்படி, வேலவன் எனக்குத் தந்திருக்கிறான்! இந்தப் பூவுலகில், மயல் என்னும் ஆசை மயக்கத்தை நீக்க, அறச் செயல்களையும், மெய்யுணர்வையும் உணர்வீர்! நா என்னும் சொல்லைக் கொண்டு, அவனின் புகழைப் பற்றியே நடப்பீர் நடப்பீர் இனிமேல்!)

யாமோ தியகல் வியுமெம் மறிவுந்
தாமே பெறவே லவர்தந் ததனாற்
பூமேன் மயல்போ யறமெய்ப் புணர்வீர்
நாமே னடவீர் நடவீ ரினியே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-17)

**

No comments:

Post a Comment