Thursday, March 10, 2016

கந்தரனுபூதி-16


கந்தரனுபூதி-16

பேராசை எனும் பிணியில் பிணி பட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர் படவேல் எறியும்
சூரா சுர லோக துரந்தரனே.

(என்னை, பேராசை என்னும் பிணியில் பிடிபடவிட்டு, தெளிவில்லாமல் செயல்களைச் செய்து அலைந்து திரியவிடுவது தகுமா? தெய்வ வீரரே! முதுமையான அசுரனை அழிக்க வேலாயுதத்தை எறிந்த சூரனே! சுரலோகம் என்னும் தெய்வ உலகத்தை காப்பவனே!)

பேரா சையெனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோ கதுரந் தரனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-16)

**

No comments:

Post a Comment