Thursday, March 10, 2016

கந்தரனுபூதி-15


கந்தரனுபூதி-15

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்க வரும் புவியும் பரவும்
குரு புங் கவ எண் குண பஞ்சரனே.

(முருகன் என்றும், குமரன் என்றும், குகன் என்று அழைத்து உருகிப் பக்தி செய்யும் செயலையும், உணர்வையும் தந்து அருள்வாய்! இந்த பூவுலகில் பெரிதும் போற்றப்படும் எட்டு வகை குணங்களையும்* கொண்டவனும் அதை தன்னக்கே வைத்துள்ள பஞ்சரனே!)
(எண் குணம் என்னும் எட்டுவகை குணங்கள்: 'தன்வயம் ஆதல், தூய உடம்பினால் ஆதல், இயற்கை உணர்வால் ஆதல், முற்றும் உணர்தல் ஆதல், பாசங்களை விடுதல் ஆதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றுல் உடைமை, வரம்பில் ஆற்றல் உடைமை);

முருகன் குமரன் குனென் றுமொழிந்
துருகுஞ் செயறந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங் கவவெண் குணபஞ் சரனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-15)
**

No comments:

Post a Comment