கந்தரனுபூதி-14
கைவாய் கதிர்வேல்
முருகன் கழல்பெற்று
உய்வாய் மனமே
ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசி
யொடும் செவியா
ஐய்வாய் வழி செல்லும்
அவா வினையே.
(கைவாய் கதிர் வேல்
என்னும் ஒளிபொருந்திய வேலை கையில் வைத்திருக்கும் முருகனின் கழல் அணிந்த
திருவடிகளைப் பற்றிக் கொண்டு உய்வாய் மனமே!(முக்தி அடைவாய்); மெய் என்னும் உடல், வாய்
என்னும் நாக்கு, விழி என்னும் கண், நாசி
எனும் மூக்கு, செவி என்னும் காது இந்த ஐந்து புலன்கள் வழியே
எனக்குத் தோன்றும் அவா என்னும் ஆசை என்னும் வினையை நீக்குவாயாக!)
கைவாய் கதிர்வேன்
முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா
யொழிவாய்
மெய்வாய் விழிநா
சியொடுஞ் செவியா
மைவாய் வழிசெல் லுமவா
வினையே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-14)
**
No comments:
Post a Comment