Thursday, March 10, 2016

கந்தரனுபூதி-13


கந்தரனுபூதி-13

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.

(தனி வேலைக் கையில் வைத்திருக்கும் முருகனே நம் குரு என்று அவன் அருளைக் கைக்கொண்டு அறியாதவர், அவரை அறியும் தரம் இல்லாதவரே! அவர், உருவம் இல்லாதவர்! உருவம் இல்லா அருவமும் அல்லர்! பொருளாய் இருப்பவரும் அல்லர்! இல்லாத பொருளும் அல்லர்! இருளாய் இருப்பவர் அல்லர்! ஒளியாய் இருப்பவரும் அல்லர்! இவ்வாறு எல்லாமுமாய் நின்றவரே!)

முருகன் றனிவேன் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
வுருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி பாடல்-13)
**


No comments:

Post a Comment