Tuesday, March 1, 2016

கந்தரலங்காரம்-42

கந்தரலங்காரம்-42

நிணம் காட்டும் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்க நிற்கும்
குணங்காட்டி ஆண்ட குருதேசிகன் அம் குறச் சிறுமான்
பணங்காட்டு அல்குற் குருகும் குமரன் பதாம்புயத்தை
வணங்காத்தலை வந்திதெங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-42)

(கொழுத்த தசைகளை உடைய இந்த உடலை விட்டு முக்தி என்னும் வீட்டை அடைய நினைக்கும் குணங்களைக் காட்டி, என்னை ஆண்ட குருதேசிகனான, அந்தக் குற இளம் மானான, பணம் என்னும் பாம்பு படம் போன்ற அல்குற்கு உருகும் குமரனின் தாமரைப் பாதத்தை வணங்காத தலை வந்து இங்கு எனக்கு எப்படி வாய்த்ததுவே!)

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்
குணங்காட்டியாண்ட குருதேசிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டுமல்குற் குருகுங்குமரன் பதாம்புயத்தை
வணங்காத்தலை வந்திதெங்கேயெனக்கிங்ஙன் வாய்த்ததுவே.


No comments:

Post a Comment