கந்தரலங்காரம்-43
கவியால் கடல் அடைத்தோன் மருகோனைக் கணபணக் கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறல் அரக்கர்
புவியார்ப்பு எழத் தொட்ட போர் வேல் முருகனைப்
போற்றி அன்பால்
குவியாக் கரங்கள் வந்து எங்கே எனக் இங்ஙன்
கூடியவே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-43)
(கவி என்னும் வீரர்களைக் கொண்டு கடலையே அடைத்து
அணை கட்டியவனான இராம வடிவான திருமாலின் மருமகனே! கணபண என்னும் பாம்பினை அணிகலனாகக்
கொண்ட கோமானான சிவனின் மகனே! திறல் அரக்கர்களை அச்சம் உண்டாக்க, இந்தப் பூமி எல்லாம் ஒலி
எழுப்பி, போர் புரியும் வேலாயுத்தை உடைய முருகனே போற்றி
அன்பால் அவனை வணங்காத கைகள் எனக்கு ஏன் வந்து சேர்ந்தன! )
கவியாற் கடலடைத்தோன் மருகோனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப்பெழத் தொட்டபோர்வேன் முருகனைப்
போற்றியன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கேயெனக் கிங்ஙன்
கூடியவே.
No comments:
Post a Comment