Tuesday, March 1, 2016

கந்தரலங்காரம்-44

கந்தரலங்காரம்-44

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு
காலால் எழுப்பி வளை முதுகு ஓட்டிக் கைநாற்றி நரம்
பால் ஆர்க்கையிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்
வேலால் கிரி துளைத்தோன் இரு தாள் அன்றி வேறில்லையே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-44)

(தோலால் சுவர் எழுப்பி, நாலும் ஆறும் சேர்த்து பத்து வகை கால் என்னும் வாயுக்களால் சேர்த்து வைத்து, இரண்டு கால்களை தூண்களாக ஏற்படுத்தி நடக்க வைத்து, வளையும் முதுகையும் ஏற்படுத்தி, கையை தொங்கவிட்டு, நரம்புகளால் சேர்த்து, தசை கொண்டு மேய்ந்து உருவாக்கி இருக்கும் இந்த அகம் என்னும் வீட்டை விட்டு போகும்போது (உயிர் விடும்போது) வேல் கொண்டு கிரி என்னும் மலையைத் துளைத்தவனின் இரு தாள் என்னும் பாதங்களைத் தவிர வேறு வழி இல்லையே!)

தோலாற் சுவர்வைத்து நாலாறுகாலிற் சுமத்தியிரு
காலாலெழுப்பி வளைமுதுகோட்டிக் கைநாற்றிநரம்
பாலார்க்கையிட்டுத் தசைகொண்டு மேய்ந்தவகம்பிரிந்தால்
வேலாற்கிரி துளைத்தோனிருதாளன்றி வேறில்லையே.


No comments:

Post a Comment