கந்தரலங்காரம்-45
ஒரு பூதரும் அறியாத் தனிவீட்டில் உரை உணர்வு அற்று
இருபூத வீட்டில் இராமல் என்றான் இரு கோட்டு ஒருகைப்
பொருபூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்
குரு பூதவேலவன் நிட்டூர சூர குலாந்தகனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-45)
(ஒருவரும் அறியாத தனி வீடான, உணர்வு இல்லா ஏகாந்தமான இருபூத வீட்டில் இருப்பாயாக என்றான்; இரு கொம்புகளும், ஒரு கை என்னும் துதிக்கையும் உடைய
மலை போன்ற யானையின் தோலை உரித்து, அதையே அணிந்து கொண்ட
திரிபுராந்தகரான சிவனுக்கே குருவாக இருந்த வேலை உடைய, சூரனின்
குலத்தையே நிட்டூரம் செய்த, சூர குலாந்தகனே!)
ஒருபூதருமறியாத் தனிவீட்டிலுரையுணர்வற்
றிருபூதவீட்டிலிராம லென்றானிரு கோட்டொருகைப்
பொருபூதரமுரித் தேகாசமிட்ட புராந்தகற்குக்
குருபூதவேலவனிட்டூர சூரகுலாந்தகனே.
No comments:
Post a Comment