கந்தரலங்காரம்-46
நீயான ஞான வினோதம் தனை என்று நீ அருள்வாய்
சேயான வேல் கந்தனே செந்திலாய் சித்ர மாதர்
அல்குற்
ஓயா உருகிப் பருகிப் பெருகித் துவளும் இந்த
மாயா வினோத மனோ துக்கமானது மாய்வதற்கே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-46)
(நீயான ஞான வினோதம் தன்னை என்று நீ எனக்கு
அருள்வாய்? சேய்
என்னும் குழந்தையான வேல் கந்தனே செந்திலாய்! அழகிய மாதர் அல்குலை விரும்பி,
உருகி பருகிப் பெருகித் துவளும் இந்த மனத்தின் மாயமான வினோதமான
மனத்தின் துக்கம் மாயும்படி செய்வதற்கே!)
நீயான ஞானவினோ தந்தனை யென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்தனே செந்திலாய் சித்ரமாதரல் குற்
றோயாவுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா வினோத மனோதுக்கமானது மாய்வதற்கே.
No comments:
Post a Comment