Tuesday, March 1, 2016

கந்தரலங்காரம்-47

கந்தரலங்காரம்-47

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித்து இருக்கும் அமுது கண்டேன் செயல் மாண்டு அடங்கப்
புத்திக் கமலத்து உருகிப் பெருகிப் புவனம் எற்றித்
தத்திக் கரை புரளும் பரமானந்த சாகரத்தே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-47)

(பக்தியுடைய ஆறு திருமுகங்களுடன், பன்னிரண்டு தோள்களுமாய் (பன்னிரு கைகளுடன்) தித்திப்பாக இனிக்கும் அமுதம் கண்டேன்! என் உயிரின் செயல்கள் மாண்டு (இறந்து) அடங்கிவிட, புத்தி (அறிவு) என்னும் தாமரையில் உருகிப் பெருகிப் புவனம் என்னும் இந்த பிரபஞ்சம் முழுவதும் கடந்து, தவழ்ந்து கரை புரண்டு ஓடும் பூரண இன்பமான சமுத்திரத்தையே!)

பத்தித்திருமுகமாறுடன் பன்னிருதோள்களுமாய்த்
தித்தித்திருக்குமமுது கண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக்கமலத்துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே.


No comments:

Post a Comment