கந்தரலங்காரம்-48
புத்தியை வாங்கி நின் பாதாம்புயத்தில் புகட்டி
அன்பாய்
முத்தியை வாங்க அறிகின்றிலேன் முதுசூர் நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடு படக்
குத்திய காங்கேயனே வினையேற்கு என் குறித்தனையே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-48)
(புத்தியை வேறுவழிக்குப் போகவிடாமல், நல்வழியில் வாங்கி,
அதை உன் பாதங்களில் செலுத்தி, அன்பாய்
முக்தியை பெற எனக்குத் தெரியவில்லையே! முது சூரனை நடுங்க வைக்க, சக்திவேலை வாங்குவதற்கு தரமாகுமா! குவடு என்னும் மலையையே தவிடு படும்படி
குத்திய காங்கேயனே! வினையை ஏற்கும் நிலையில் உள்ள என்னை என்ன செய்வதாக குறித்து
வைத்துள்ளாய்?)
புத்தியை வாங்கிநின் பாதாம்புயத்திற்
புகட்டியன்பாய்
முத்தியை வாங்கவறிகின்றிலேன் முதுசூர்நடுங்கச்
சத்தியைவாங்கத்தர மோகுவடுதவிடுபடக்
குத்திய காங்கெயனே வினையேற்கென்குறித்தனையே.
No comments:
Post a Comment