கந்தரலங்காரம்-49
சூரில் கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்
குழாம்
சாரில் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடி போய்த்
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வமெல்லாம்
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-49)
(சூரன் மீதும், கிரி என்னும் மலைமீதும் கதிர்வேலை
எறிந்தவனான உன் தொண்டர்களின் கூட்டத்தை சார்ந்து இருப்பதைத் தவிர வேறு கதி இல்லை
என்று காண்பாயாக! தண்டு தாவடி என்னும் படைகளுடன் போய், தேரிலும்,
கரி என்னும் யானையிலும், பரி என்னும்
குதிரையிலும் திரிபவர்களின் செல்வம் எல்லாம் நீரில் பொறித்த எழுத்தாக ஆகும் என்று
அறியாத பாவியாக உள்ள நெடு நெஞ்சமே!)
சூரிற்கிரியிற் கதிர்வேலெறிந்தவன் றொண்டர்குழாஞ்
சாரிற்கதியன்றி வேறிலைகாண்டண்டு தாவடி போய்த்
தேரிற்கரியிற் பரியிற்றிரிபவர் செல்வமெல்லா
நீரிற்பொறியென் றறியாத பாவிநெடுநெஞ்சமே.
No comments:
Post a Comment