Wednesday, March 2, 2016

கந்தரலங்காரம்-50

கந்தரலங்காரம்-50

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்தது அஞ்சல் என்பாய் பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயிலேறும் இராவுத்தனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-50)

(திருப்புகழைப் படித்து போற்றுபவன்; கூற்றுவன் என்னும் எமன் வந்து பாசக் கயிற்றை வீசிப் பிடிக்க வரும்போது, "அஞ்சாதே" என்று வந்து நிற்பாய்! பெரிய பாம்பில் நின்று கொண்டு நடிக்கும் பிரானான திருமாலின் மருமகனே! கொடுமையான சூரனை நடுங்க வைக்க, வெற்பு என்னும் பெரும் மலையையே இடித்து கலாபத் தனி மயிலில் ஏறிவரும் இராவுத்தனே!)

படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுது வந்தஞ்சலென்பாய் பெரும்பாம்பினின்று
நடிக்கும் பிரான் மருகா கொடுஞ்சூரனடுங்க வெற்பை
யிடிக்குங் கலாபத்தனி மயிலேறு மிராவுத்தனே.
(கந்தரலங்காரம்-50)


No comments:

Post a Comment