Wednesday, March 2, 2016

கந்தரலங்காரம்-51

கந்தரலங்காரம்-51

மலை ஆறு கூற் எழ வேல் வாங்கினானை வணங்கி அன்பின்
நிலையான மாதவம் செய்குமினோ நும்மை நேடிவரும்
தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையும் கண்டீர்
இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து ஏற்றவர்கே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரரங்காரம் பாடல்-51)

(மலையே ஆறு கூறுகளாக விழும்படி வேல் ஏறிந்தவனை வணங்கி, அன்பின் நிலையான பெரும் தவத்தை செய்வீர்! உம்மைத் தேடி வரும் தொலையா வழிக்கு கட்டுச் சோறு எப்படி நல்ல துணையாக இருக்குமோ அதுபோல செய்யும் மா தவம் துணை செய்யும். பசி என்று கேட்டவனுக்கு, இலைச் சாப்பாடாக இருந்தாலும் சரி, வெந்தது எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பகிர்ந்து உண்ணுங்கள்!)

மலையாறு கூறெழ வேல் வாங்கினானை வணங்கியன்பி
னிலையான மாதவஞ் செய்குமினோ நும்மைநேடிவருந்
தொலையாவழிக்குப் பொதிசோறுமுற்ற துணையுங்கண்டீ
ரிலையாயினும் வெந்ததேதாயினும் பகிர்ந்தேற்றவர்கே.
(கந்தரலங்காரம்-51)


No comments:

Post a Comment