கந்தரலங்காரம்-52
சிகர அத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்
தமிழால்
பகர் ஆர்வமீ பணி பாச சங்கராம பணா மகுட
நிகராட்சம் பட்ச பட்சி துரங்க ந்ருபாகுமரா
குக ராட்ச்ச பட்ச விட்சோப தீர குணதுங்கனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 52)
(சிகரம் என்னும் மலையையே கூறிட்டுப் பிளந்த
வேலையும், செஞ் சேவலையும், செம்மையான தமிழால் சொல்லும் ஆர்வத்தை கொடுப்பாயாக! பாசக் கயிறு போன்று,
பாம்பின் மகுடத்தை தூள் ஆக்குகிற நிகரில்லா ராட்சச பறவையின் சிறகுகளைக்
கொண்ட மயில் வாகனத்தை உடையவரே! குகையில் வசிக்கும் இராட்சசர் மீது வெறுப்பை
காட்டுபவனே! தீர வீரனே! குணமுள்ளவனே!)
சிகராத்ரிகூறிட்ட வேலுஞ் செஞ்சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணிபாச சங்கராம பணாமகுட
நிகராட்சம பட்சபட்சி துரங்கந்ருபாகுமரா
குகராட்ச்சபட்ச விட்சோபதீர குணதுங்கனே.
(கந்தரலங்காரம்-52)
No comments:
Post a Comment