கந்தரலங்காரம்-53
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்
அன்பினால்
பாடிக் கசிந்து உள்ள போதே கொடாதவர் பாதகத்தால்
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத்
திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணாக்கிமாய்ப்பவரே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 53)
(வேடவப் பெண்ணின் கொங்கையை விரும்பிய குமரனே!
உண்மையான அன்பினால், உன்னைப் பாடி, கசிந்து, இருக்கும்போது கொடுக்காதவர், பாதக வழியில், தாம்
தேடிப் புதைத்து வைத்த பொருள்களை, திருட்டில் கொடுத்துவிட்டு,
திகைத்து, உடல் இளைத்து, வாடி, வாட்டம் என்னும் துக்கம் அடைந்து, வாழ்நாளை வீணாக்கி அழிப்பார்கள்!)
வேடிச்சிகொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக்கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப்புதைத்துத் திருட்டிற் கொடுத்துத்
திகைத்திளைத்து
வாடிக்கிலேசித்து வாழ்நாளை வீணாக்குமாய்ப்பவரே.
(கந்தரலங்காரம்-53)
No comments:
Post a Comment