கந்தரலங்காரம்-54
சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித்
தளர்ந்தவர்க்கு ஒன்று
ஈகைக்கு எனை விதித்தாய் இல்லையே இலங்காபுரிக்குப்
போகைக்கு நீ வழிகாட்டு என்று போய்க் கடலில்
கொழுந்த
வாகைச்சிலை வளைத்தோன் மருகா மயில்வாகனனே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 54)
(சாவதற்கும் மீண்டும் பிறப்பதற்கும் தவிர, வறுமையில் தளர்ந்தவர்க்கு
ஒரு தர்மத்தைச் செய்தவற்கு என்னை ஏற்படுத்தி வைக்கவில்லையே! இலங்காபுரிக்கு
போகும்போது, அந்த கடலைப் பார்த்து "எனக்கு
வழிவிடு" என்று கேட்ட இராமனுக்கு, அந்தக் கடலே
நெருப்பாக மாறி எரியும் அளவுக்கு, வாகை என்னும் வில்லை
வளைத்த இராம அவதாரமான திருமாலின் மருமகனே! மயிலை வாகனமாக வைத்திருப்பவனே!)
சாகைக்கு மீண்டு பிறக்கைக்குமன்றித்
தளர்ந்தவர்க்கொன்
றீ கைக்கெனை விதித்தாயிலையே யிலங்காபுரிக்குப்
போகைக்குநீவழிகாட் டென்று போய்க்கடறீக் கொழுந்த
வாகைச்சிலைவளைத்தோன் மருகா மயில்வாகனனே.
(கந்தரலங்காரம்-54)
No comments:
Post a Comment