கந்தரலங்காரம்-55
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார் தினைப்போது
அளவு
ஓங்கார்த்துள் ஒளிக்கும் உள்ளே முருகன்
உருவங்கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார்
யமதூதருக்கே.
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல் 55)
(ஆங்காரமும் அடங்கி ஒடுங்கி, பரமானந்தத்தில் தேங்கி
இருக்க மாட்டார்; நினைப்பும், மறப்பும்,
அற்ற சமாதி நிலையில் இருக்க மாட்டார்; ஒரு
தினை அளவு நேரமாவது ஓங்காரத்துக்குள் ஒளிக்கும் ஒளியுள்ளே முருகனின் தரிச
உருவத்தைக் கண்டு, தூங்க மாட்டார்(தியான நிலையில் இருக்க
மாட்டார்); தொழும்பு என்னும் தொண்டு செய்ய மாட்டார்; இப்படி இருப்பவர், எமதூதன் வரும்போது என்ன செய்வார்?)
ஆங்காரமுமடங்கா ரொடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார் நினைப்புமறப்பு மறார்தினைப்போதளவு
மோங்கார்த்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யாரென் செய்வார்
யமதூதருக்கே.
(கந்தரலங்காரம்-55)
No comments:
Post a Comment