கந்தரலங்காரம்-56
கிழியும்படி அடற்
குன்று எறிந்தோன் கவிகேட்டு உருகி
இழியும் கவிகற்றிடாது
இருப்பீர் எரி வாய் நரகக்
குழியும் துயரும்
விடாய்ப் படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும்
பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-56)
"அடர் குன்று
என்னும் மலையை கிழித்து எறிந்தவனின் கவியைக் கேட்டு உருகி இருப்பீர்! இழிவான கவியை
கேட்காதீர்கள்; எரியும் வாயுடைய நரகக்
குழியையும், அதன் துயரத்தையும் விட்டுவிடாது; கூற்றுவன் என்னும் எமனின் ஊருக்குச் செல்லும் வழியையும் அதன் துயரத்தையும்
மறந்தவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள்!!"
கிழியும்படியடற்
குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங்
கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும்
விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும்
பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
(கந்தரலங்காரம்-56)
No comments:
Post a Comment