Thursday, March 3, 2016

கந்தரலங்காரம்-56

கந்தரலங்காரம்-56

கிழியும்படி அடற் குன்று எறிந்தோன் கவிகேட்டு உருகி
இழியும் கவிகற்றிடாது இருப்பீர் எரி வாய் நரகக்
குழியும் துயரும் விடாய்ப் படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-56)

"அடர் குன்று என்னும் மலையை கிழித்து எறிந்தவனின் கவியைக் கேட்டு உருகி இருப்பீர்! இழிவான கவியை கேட்காதீர்கள்; எரியும் வாயுடைய நரகக் குழியையும், அதன் துயரத்தையும் விட்டுவிடாது; கூற்றுவன் என்னும் எமனின் ஊருக்குச் செல்லும் வழியையும் அதன் துயரத்தையும் மறந்தவர்களுக்கு சொல்லுங்கள், சொல்லுங்கள்!!"

கிழியும்படியடற் குன்றெறிந்தோன் கவிகேட்டுருகி
யிழியுங் கவிகற்றிடாதிருப்பீரெரி வாய்நரகக்
குழியுந்துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க்குச் செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
(கந்தரலங்காரம்-56)


No comments:

Post a Comment