கந்தரலங்காரம்-57
பொருபிடியும் களிறும்
விளையாடும் புனச்சிறுமான்
தருபிடிகாவல் சண்முகா
வா எனச் சாற்றி நித்த
இருபிடிசோறு
கொண்டிட்டு உண்டு இரு வினையோம் இறந்தால்
ஒருபிடி சாம்பரும்
காணாது மாய உடம்பு இதுவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-57)
"போருக்கு
போகும் பிடியும் களிறும் ஆன யானைகள் விளையாடும் புனலில் திரியும் சிறு மான் பெற்ற, யானையைப் போன்றவளை (வள்ளியை) அடைந்த சண்முகனே என்று
துதிபாடி, தினமும், இரு பிடி சோறு
கொடுத்து உண்ணச் செய்து, ஏழைகளுக்கு உதவி செய்துவா! இரு
வினைகளான நல்வினை, தீவினை இவைகளுடன் நாம் இறந்தால், ஒரு பிடி அளவு சாம்பல் கூட தேராது இந்த மாய உடம்பு என்று அறிந்து
கொள்!"
பொருபிடியுங் களிறும்
விளையாடும் புனச்சிறுமான்
றருபிடிகாவல்
சண்முகவாவெனச் சாற்றிநித்த
மிருபிடிசோறு
கொண்டிட்டுண்டிரு வினையோமிறந்தா
லொருபிடி சாம்பருங்காணாது
மாயவுடம்பிதுவே.
(கந்தரலங்காரம்-57)
No comments:
Post a Comment