Thursday, March 3, 2016

கந்தரலங்காரம்-58

கந்தரலங்காரம்-58

நெற்றாப் பசுங் கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற்கு இனிய பிரான் இக்கு முல்லையுடன்
பற்றாக் கையும் வெந்து சங்க்ராம வேளும் பட விழியால்
செற்றார்க்கு இனியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-58)
"முற்றாத பசுமையான கதிர்களை உடைய, சிவந்த வேனல் என்னும் தினை வயலைக் காக்கின்ற, நீலநிற வள்ளியின், முற்றாத தனத்திற்கு இனிமையானவனான பிரானே! கரும்பில் வில்லும், முல்லை மலரில் அம்பும், அதைப் பற்றி இருக்கிற கையும் வெந்து சாம்பலாகும்படி, செய்த வேள்போன்ற பாம்பின் விழியான நெற்றிக்கண்ணை உடைய சிவனின் இனியவனே (மைந்தனே)! நீ தேவேந்திர உலகத்துக்கே சிகாமணி (தலையின் கிரீடம்) ஆனவன்;"

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்குமுல்லையுடன்
பற்றாக் கையும் வெந்து சங்க்ராம வேளும் பட விழியாற்
செற்றார்க் கினியவன்றேவேந்த்ர லோகசிகாமணியே.
(கந்தரலங்காரம்-58)


No comments:

Post a Comment