கந்தரலங்காரம்-59
பொங்கு ஆர வேலையில்
வேலை விட்டோன் அருள் போல் உதவ
எங்காயினும் வரும்
ஏற்பவர்க்கு இட்டது இடாமல் வைத்த
வங்காரமும் உங்கள்
சிங்கார வீடு மடந்தையரும்
சங்காதமோ கெடுவீர்
உயிர் போம் அத்தனிவழிக்கே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-59)
"பொங்கி ஆரவாரம்
செய்யும் கடலில் வேலாயுதத்தை விட்டவன் அருள்போல உதவ, வறுமையில்
உதவி கேட்டவருக்கு உதவினால், அது உங்களுக்கு தப்பாமல்
எங்கிருந்தாவது வந்து உதவும்; ஆனால், அப்படி
உதாவாதவர் வைத்திருக்கும் வங்காரம் என்னும் பொன் பொருள்கள், உங்கள்
சிங்காரமான வீடு, அதிலுள்ள உங்களின் பெண்கள், இவைகள், உங்களுக்கு உயிர் போகின்றபோது வந்து
உதவிக்கு வருமா?"
பொங்கார வேலையில்
வேலைவிட்டோனருள் போலுதவ
வெங்காயினும்
வருமேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்காரமுமுங்கள்
சிங்காரவீடுமடந்தையருஞ்
சங்காதமோகெடுவீருயிர்போ
மத்தனிவழிக்கே.
(கந்தரலங்காரம்-59)
No comments:
Post a Comment