கந்தரலங்காரம்-60
சிந்திக்கிலேன்
நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன்
ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை
நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும்
காயக்கிலேசமும் போக்குதற்கே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-60)
"நான், உன்னைச் சிந்திக்கவும் இல்லை! சேவிக்கவும் இல்லை! உன்
தண்டை அணிந்த சிறிய பாதங்களை வந்து வணங்கவும் இல்லை! உன்னை வாழ்த்தவும் இல்லை!
மயில்வாகனனாக உன்னை வந்து சந்திக்கவும் இல்லை! பொய் சொல்வதை வெறுக்கவும் முடியவில்லை!
உண்மையை சாதிக்கவும் முடியவில்லை! என் புத்தி தடுமாறுகிறது! உடலும் தடுமாறுகிறது!
அதை போக்குவாயாக!"
சிந்திக்கிலேனின்று
சேவிக்கிலேன் றண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேனொன்றும்
வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை
நிந்திக்கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக்கிலேசமுங்
காயக்கிலேசமும் போக்குதற்கே.
(கந்தரலங்காரம்-60)
No comments:
Post a Comment