கந்தரலங்காரம்-61
வரை அற்று அவுணர்
சிரம் அற்று வாரிதி வற்றச் செற்ற
புரையற்ற வேலவன்
போதித்தவா பஞ்ச பூதமும் அற்று
உரையற்று உணர்வு
அற்று உடலற்று உயிரற்று உபாயம் அற்றுக்
கரை அற்று இருள்
அற்று என அற்று இருக்கும் அக்காட்சியதே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரலங்காரம் பாடல்-61)
"வரை என்னும்
மலையை பிளந்து அதை இல்லாமல் செய்தும், அவுணர்கள் என்னும்
அசுரர்கள் தலைகளை வீழ்த்தி அவர்களை இல்லாமல் செய்தும், வாரிதி
என்னும் கடலை வற்றச் செய்தும், புரை என்னும் குற்றமே இல்லாத
வேலவனே! நீ போதித்த, 'பஞ்சபூதமும் இல்லாமல் அழிந்து, உரை என்னும் சொல் அற்று, உணர்வு அற்று, உடல் அற்று, உயிர் அற்று, உபாயம்
என்னும் வழி அற்று, கரை இல்லாமல், இருள்
இல்லாமல் என எல்லாமே இல்லாத நிலை என்று' இருக்கும் காட்சியே!'
(நீ உபதேசித்தது).
வரையற்றவுணர்
சிரமற்றுவாரி திவற்றச்செற்ற
புரையற்ற வேலவன்
போதித்தவா பஞ்சபூதமுமற்
றுரையற்றுணர்
வற்றுடலற்றுயிரற்று பாயமற்றுக்
கரையற்றிருளற்றென
தற்றிருக்குமக்காட்சியதே.
(கந்தரலங்காரம்-61)
No comments:
Post a Comment