Friday, March 4, 2016

கந்தரலங்காரம்-64

கந்தரலங்காரம்-64

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பார் அறிய
வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருத செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா சத்திவாள் என்றன் கையதுவே.

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-64)
"பட்டிக் கடா என்னும் எருமைக்கடாவில் வரும் அந்தகன் என்னும் எமனே, உன்னை இந்த உலகம் அறிய உன்னை வெட்டி, புறமுதுகிட்டு ஓடும்படி செய்யாமல் விடமாட்டேன்; கொடிய சூரனைப் போய் முட்டி போர் செய்து, சிவந்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானின் முன்பு நிற்கிறேன்! உன் எல்லா ஆயுதங்களையும் கட்டிக் கொண்டு புறப்படடா; என் கையில் சத்தியாகிய வாள் உள்ளது!"

பட்டிக்கடாவில் வருமந்தகாவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்யசூரனைப்போய்
முட்டிப் பொருத செவ்வேற் பெருமாடிருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா சத்திவாளென்றன் கையதுவே.
(கந்தரலங்காரம்-64)


No comments:

Post a Comment