Saturday, December 27, 2014

புல்லின்வாய் கீண்டானை


புல்லின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை | 
கில்லிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் | 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் | 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று | 
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் | 
குள்ளக் குளிரக் குடைந்து நீர் ஆடாதே | 
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் | 
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment