அபிராமி அந்தாதி 5-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(மனக் கவலை தீர)
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே!
தெளிவுரை
அம்மா அபிராமியே, உயிர்களிடத்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே! செப்பை உவமையாகக் கொண்ட தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியே! நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமான் அருந்திய விஷத்தை அமுதம் ஆக்கிய அம்பிகையே! தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் அழகியே! அனைத்து இடங்களிலும் நிறைந்து இருப்பவளே! தாமரை மலர் போன்ற உன்னுடைய மென்மையான திருவடிகளை என் தலை மீது வைத்துக் கொண்டுள்ளேன்;
(அம்புயம்=தாமரை; அந்தரி=அந்தரத்தில் இருப்பவள்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான “அபிராமி அந்தாதி தெளிவுரை” என்ற நூலிலிருந்து)
No comments:
Post a Comment