அபிராமி அந்தாதி 4-ம் பாடல்
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
(உயர்ந்த நிலையை அடைய)
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!
தெளிவுரை
மனிதர்களும், தேவர்களும், மரணமில்லாத முனிவர்களும், வந்து தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களை உடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றை மலரையும், குளிர்ச்சியைத் தருகின்ற இளம்பிறைச் சந்திரனையும், பாம்பினையும், கங்கையையும் அணிந்து விளங்குகின்ற புனிதராகிய சிவபெருமானும் நீயும் என் மனத்தில் எப்பொழுதும் தங்கி அருள்புரிந்து ஆட்சியருள வேண்டும்;
(மாய=மரணமில்லாத; புந்தி=மனம்).
(நன்றி: திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை என்ற நூலிலிருந்து)
No comments:
Post a Comment